tamilnadu

img

ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசமும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.