tamilnadu

img

விழுப்புரம் அருகே 10 வீடுகளில் தீ விபத்து!

விழுப்புரம், பிப்.09-
விழுப்புரம் அருகே மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அடுத்துள்ள தும்பூர் தாங்கல் கிராமத்தில் அஞ்சுலட்சுமி என்பவர் வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் இருந்த பத்து வீடுகளிலும் தீ பரவியுள்ளது
தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீட்டில் உள்ள அனைத்தும் பொருட்களும் தீயில் சேதமடைந்தன. 
இந்த விபத்தில், அனைத்து வீடுகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

;