tamilnadu

img

தோழர் அ.சேகர் நினைவு தினம் கடைப்பிடிப்பு

விருதுநகர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள்செயலாளர் தோழர் அ.சேகரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்விருதுநகரில் கடைப்பிடிக்கப்பட் டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி தலைமையில் நடந்த அஞ்சலி நிகழ்வில் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தியாகி சந்துரு நினைவகத்தில் நகர்குழு உறுப்பினர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகராட்சி சாலையில் கிளைச் செயலாளர் எம்.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் வீ.மாரியப்பன், பாண்டியன் நகரில் புஷ்பராஜ், நகர் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.