உளுந்தூர்பேட்டை, நவ. 7- திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன நகைகளை, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த விவசாயிகளுக்கு தமிழக அரசும், கூட்டுறவுத் துறை யும் பொறுப்பேற்று முழுமையாக திருப்பி வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட் டம்; கூட்டுறவுத்துறை துணைப் பதி வாளர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட தால் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது, களவு போன 1790 பவுன் நகைகளின் உரிமையாளர்களான 493 கடன் தாரர்களுக்கு அதன் தற்போதைய மதிப்பீட்டுத் தொகையை திருப்பித் தருவதற்கு அரசிற்கும், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளருக்கும் பரிந்துரைத்து அர சின் நிதியுதவியை பெற்று நடவ டிக்கை எடுப்பது எனவும், மூன்று மாத காலத்திற்குள் இப் பணிகளை முடிப்பது எனவும் எழுத்து மூலமான உடன்பாடு ஏற்பட்டது.