tamilnadu

img

சிபிஎம் நடத்த இருந்த கஞ்சித் தொட்டி போராட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம், மார்ச் 16-  விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட் சிகளிலும் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனை வருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 35 மையங்களில்  திங்களன்று (மார்ச் 16) கஞ்சித் தொட்டி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி அறிந்த துறை சார்ந்த அதிகாரிகள் சிபிஎம் தலைவர்களுடன் ஞாயி றன்று (மார்ச் 15) பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 100 நாள் வேலை, முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக் கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதி காரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து 1 கஞ்சி தொட்டி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக சிபிஎம் தலைவர்கள் தெரிவித்துள்ள னர்.