tamilnadu

img

150 மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்

விருதுநகர், மே13- விருதுநகர் அருகே உள்ளது வெள்ளூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.  கொரோனா  தொற்று கார ணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமப்பட்டு வரு கின்றனர். இந்தநிலையில், பள்ளி ஆசிரியர்கள் அனை வரும் தங்களது சொந்தச் செலவில் தங்களிடம் படித்து வரும் 150 மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

;