சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டாச்சிபுரத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் எஸ். சித்ரா, வட்டச் செயலாளர் உமாமகேஸ்வரி, தலைவர் கலைவாணி, பொருளாளர் சாந்தலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.