states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் ஹன்னா முல்லா

நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய அவசரநிலையை விட இது கொடுமையாக இருக்கிறது. முந்தைய அவசரநிலையின் போது “ஆர்எஸ்எஸ்காரர்களை சிறையிலிருந்து விடுவித்தால், அவசரநிலையை ஆதரிப்போம்” என ஆர்எஸ்எஸ் மூன்று முறை இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியது. அதனால் அவசரநிலையை எதிர்த்து பேச ஆர்எஸ்எஸ் எந்த தகுதியும் கிடையாது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் 18 மாத ஈரானிய குழந்தையை தூக்கிப் போட்டு ஒரு சைக்கோ கொலை செய்யும் காணொலி என்னை நொறுக்கி விட்டது. ஏன் இத்தனை வெறுப்பு? யாருக்காக, எதற்காக இந்த வெறுப்பு? மத, இன பேதமின்றி எல்லா மனிதர்களுக்கும் அன்பும் மரியாதையும் கிடைக்க இந்த உலகம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள். மகாராஷ்டிராவின் தொடக்கப் பள்ளிகளில் இந்தி திணிப்புக்கு எதிராக ஜூலை 5ஆம் தேதி தாக்கரேவின் சகோதரர்கள் (உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே) கூட்டாக ஒரு போராட்டப் பேரணியை நடத்துவார்கள்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அதனால் பாஜக நல்லிணக்கத்தை சீர்குலைக்க “ஸ்லீப்பர் செல்களை” பயன்படுத்தி வருகிறது. இதற்கு எட்டவா (கதா காலட்சேபம் மீது தாக்குதல்) சம்பவமே சாட்சி.