தியாகிகள் குமார் - ஆனந்தன் 26வது நினைவு தினம் அனுசரிப்பு
கடலூர், ஜூன் 27- கள்ளச்சாராயத்தை எதிர்த்துப் போராடி படு கொலையான வாலிபர் சங்க தியாகிகள்குமார், ஆனந்தன் ஆகியோரின் 26வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர்களின் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கடலூர் மாவட்டம், புதுப்பாளை யம் பகுதியில் கொடிகட்டிப் பறந்த கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்துப் போராடியதற்காக கடலூர் புதுப்பாளையத்தில் வாலிபர் சங்க தோழர்கள் குமார், ஆனந்தன் ஆகி யோரை கள்ளச்சாராய வியாபாரிகள் வெட்டிப் படுகொலை செய்தனர். புதுப்பாளையம் சுப்பிரமணிய கோவில் தெருவில் அவர்களுடைய உருவப்படம் வைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். போதைக்கு எதிரான உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு சிபிஎம் புதுப்பாளையம் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பக்கீரான், கிருஷ்ணன், குடி யிருப்போர் சங்கத்தின் சிறப்புத் தலை வர் எம்.மருதவாணன், பொதுச் செய லாளர் பி.வெங்கடேசன், மாநகர குழு உறுப்பினர்கள் திருமுருகன், தமிழ்மணி, கருணாகரன், பூபதி, தேவ நாதன், கிளைச் செயலாளர் சீனு, தியாகி குமார் தாயார் சாவித்திரி, சகோ தரர் மாரிமுத்து, தியாகி ஆனந்தன் சகோதரர்கள் ராஜேந்திரன், மகி, மணிமாறன், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.