tamilnadu

img

மாணவர் சங்க சைக்கிள் பிரச்சாரம்: ‘ரெட் ரிப்பன்’ வரவேற்பு

உளுந்தூர்பேட்டை மே 28-தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதை கண்டித்தும்,  தொடர்ந்து அனைத்து அரசுப் பள்ளிகளையும் செயல்படுத்தக் கோரியும், அரசுப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளி மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்த கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தாம்பரத்தில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணக்குழு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை வந்தடைந்தது.தெற்கு மாவட்ட எல்லையான பேரங்கியூரிலிருந்து மாவட்டத் தலைவர் ரிச்சட்பிரபு, செயலாளர் கேவி ஸ்ரீபத் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசூர் கூட்டுச் சாலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் சகோதர அமைப்புகளின் சார்பில் பயண குழுவினருக்கு மலர் தூவி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தில் பயணக்குழு தலைவரும், சங்கத்தின் மாநிலச் செயலாளருமான மாரியப்பன் பயணத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் வி. ஏழுமலை, எம்.கே.பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் அ.மா.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, முன்னாள் மாநிலத் தலைவர் எம்.செந்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், எம்.கே.பூவராகன், டி.எஸ்.மோகன், ஜெ. ஜெயக்குமார், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, ஏ.சக்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து மடப்பட்டு, பரிக்கல், பெரும்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், பிள்ளையார்குப்பம், களமருதூர். கொரட்டங்குறிச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் மற்றும் அரளி ஆகிய இடங்களில் எழுச்சியான வரவேற்பளிக்கப்பட்டது.விழுப்புரம்முன்னதாக, விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனத்திற்கு வந்தடைந்தது.  அங்கு வாலிபர் சங்கம், முற்போக்கு தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் பிரச்சார பயணத்தின் பிரச்சாரத்தை தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினரும், வழக்கறிஞருமானஏ.கோதண்டம் தொடங்கி வைத்தார்.  வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன் வாழ்த்திப் பேசினார்.மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அபுபக்கர் சித்திக், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி டி.ராமதாஸ், வாலிபர் சங்க பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். அதனைத் தொடர்ந்து கூட்டேரிபட்டில் வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கம் சார்பில் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜ், விவசாய சங்க கோவிந்தசாமி ஆகியோர்  தலைமையிலும், விக்கிரவாண்டியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சேகர் தலைமையிலும், முண்டியம்பாக்கத்தில் ஆட்டோ சங்கம் சார்பில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், எல்ஜசி முகவர் சங்கத்தின் ரமேஷ் ஆகியோர் தலைமையிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.விழுப்புரத்தில் இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகி செந்தில்குமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சண்முகசாமி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வட்ட தலைவர் தேவநாதன் தலைமையில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சார குழுவினருக்கு ரெட் ரிப்பன் அணிவித்து சிவப்பு ரிப்பன் வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்து கொண்டு பிரச்சார பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் பேரணியை வாழ்த்தி பேசினார்.  மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கார்க்கி, சிபிஎம் வட்டச் செயலாளர் கண்ணப்பன், மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.