tamilnadu

விழுப்புரத்தில் ரவுடி வெட்டிக் கொலை அச்சத்தில் மக்கள்

விழுப்புரம்.பிப்.24- விழுப்புரம் கணபதி நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் லாலி என்ற  கார்த்திக் (32). இவர் நிறைமாத கர்ப்பிணி யான மனைவி கவிதாவை பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பையூரில் உள்ள  அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதி யம் சுமார் 1 மணிக்கு கார்த்திக் வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ  இடத்துக்கு வந்து பூட்டி கிடந்த வீட்டின் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழுத்து மற்றும் கையில் வெட்டுக்  காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்  யப்பட்டு பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர் பூந்தோட்டம், மேல்வன்னியர் தெரு வைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜா என்கிற  காஜா(32) என்பதும், இவர் பிரபல ரவுடி, இவர் கார்த்திக்கின் நண்பர் என்பதும் தெரிய வந்தது. கொலை நடந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கர்  பார்வையிட்டு அக்  கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி னார். பின்னர் ராஜாவின் உடலை கைப்  பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  கார்த்திக் மீது 2 கொலை வழக்கும், வினோத், ராஜா மீது தலா ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. கார்த்திக், வினோத் ஆகியோரை பிடித்தால் தான் உண்மை சம்பவம் தெரியவரும் என்பதால் இருவரையும் கைது செய்ய மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தர விட்டார்.  அதன்பேரில் விழுப்புரம் தாலுகா காவல்  துறையினர் தலை மறைவாக இருந்த இரு வரையும் கைது செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். எனவே, கார்த்திக், வினோத் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களாக விழுப்புரத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வரு வதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்  சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

;