tamilnadu

img

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி

ஏற்காடு, நவ.22-  ஏற்காட்டில் குறுகிய காலத்தில் விளைச்சல் தரக்கூடிய சிறுதானியங்கள் குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி வெள்ளியன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காடு பெலாக்காடு கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில்  சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கினர். பெலாக்காடு கிராம மந்தையில் இருந்து துவங்கிய பேரணி தெருக்களின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. முன்னதாக ராகி, சாமை, திணை, குதிரைவாலி உள் ளிட்ட சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்தும், குறுகிய காலத்தில் விளைச்சலால் அதிக லாபம் ஈட்டப்படுமென விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இப்பேரணியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், அய்யந்துரை மற்றும் அட்மா திட்ட அலுவ லர்கள் சதீஸ் குமார், துரை அரசு மற்றும் கேளையூர், மார மங்கலம், அரங்கம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.