tamilnadu

img

சிபிஎம் போராட்டத்தில் காவல்துறை அராஜகம்

விழுப்புரம், ஆக.13- விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டக்குப் பத்தில் வானூர் வட்டச் செய லாளர் ஜி.ராஜேந்திரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ஏஐஎல்யு வி. கதிரேசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி. ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா,  எஸ்.முத்துக்குமரன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ண மூர்த்தி, எம்.புருசோத்தமன், எம்.கே.முருகன், பி.சவுந்தர ராஜன், என்.பழனி, கே.சுந்தர மூர்த்தி, வி.அர்சுணன், சே. அறிவழகன், ஆர்.டி.முரு கன், எஸ்.சித்ரா, ஏ.நாக ராஜன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அப்போது சம்பவ இடத்  திற்கு வந்த காவல் துறை யினர் ஒலிபெருக்கியை நிறுத்  தினர். இதனால் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து ஒலி பெருக்கி மீண்டும் இயக்கப் பட்டது. தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் காவல் துறையினர் ஒலி பெருக்கியை நிறுத்தி, அனைவரையும் கைது செய்தனர்.  மக்கள் நலன்சார்ந்த போராட்டங்களை ஒடுக்க  நினைக்கும் காவல் துறை யினரின் நடவடிக்கையை வண்மையாக கண்டிப்பதாக மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் தெரி வித்தார்.