விழுப்புரம், ஜூன் 18- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ராதாபுரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் மினி குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டம் குறைந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும், மினி குடிநீர் தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் குடிநீர் கேட்டு கடந்த வாரம் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த னர். இதையடுத்து அதிகாரிகள் மினிகுடிநீர் தொட்டிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக ளுக்கு தண்ணீர் ஏற்ற புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பொது மக்களுக்கு போது மான அளவுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. குடி நீருக்காக அவர்கள் காலி குடங்களு டன் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. அத னால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சிர மப்பட்டு வந்தனர். இதுகுறித்து புகார் தெரி வித்த பின்பும் அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் புதுச்சேரி, விழுப்புரம் சாலை யில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்த தகவல் அறிந்த விக்கிர வாண்டி காவல் துறையினர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது புதிய ஆழ்துளை கிணறு கள் அமைத்து வருகிற 21ஆம் தேதி முதல் போதுமான அளவுக்கு குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.