அமைச்சர்கள் அறிவிப்பு
சென்னை,நவ.8- பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்ந்தது. இந்நிலையில் பண்மை பசுமை நுகர்வோர் கடைகளில் வெள்ளியன்று முதல் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத் துறை அமைச்சர் இரா. காமராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். வெளிச்சந்தையை விட குறைவாக, ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய் மற்றும் 40 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.