tamilnadu

img

வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், நவ.19- வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலை வர்கள் ஏ.தண்டபாணி, எம்.சேகர் ஆகியோர்  தலைமை தாங்கினர், எம்.விஸ்வநாதன்,கே.தமிழ்மணி, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்  தலைவர் அ.து.கோதண்டன், மாவட்டத்  தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்டச் செய லாளர் கே.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட ஒரத்தூர்,கப்பியாம்புலியூர், வி.சாத்தனூர், நங்காத்தூர், மூங்கில்பட்டு, கஞ்சனூர், முண்டியம் பாக்கம், கொட்டியாம் பூண்டி, விக்கிரவாண்டி, தும்பூர், முட்டத்தூர், உள்  ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஆண்டு களாக நிரந்தரமாக வீடுகளும், மனைகளும் இல்லாமல் புறம்போக்கு இடங்களில் வசித்து வருபவர்களுக்கு ஆட்சியாளர்கள் அறிவித்தபடி பட்டா வழங்க வேண்டும். இதற்  காக சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 வயது  நிரம்பிய அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் உத வித் தொகை வழங்க வேண்டும், நீர் நிலைகள்,  மேய்ச்சல் புறம்போக்கு, கோயில் இடங்க ளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் மற்றும்  318 ன் படி வீட்டு மனை பட்டா வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.தண்டபாணி, கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு  உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சங்க வட்டச்  செயலாளர்கள் பி.கலியமூர்த்தி, என்.குமார்,  மாவட்டக் குழு ஏ.பிரேமா உட்பட பலர்  கலந்து கொண்டனர். இதனை  தொடர்ந்து  விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் துணை வட்டாட்சியர் முத்தாம்மாவி டம் 500 க்கும் மேற்பட்ட  மனுவை அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்டு பரிசோ தனை செய்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.