எல்ஐசி முகவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 25 ஆயிரம் வழங்க வேண்டும், 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) சார்பில் ஞாயிறன்று (மே 10) விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் அகில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் சம்பத், கிளைத் தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.