tamilnadu

விருதுநகர் மாவட்டத்தில் 57 கட்டுப்பாட்டு மண்டலங்கள்

விருதுநகர், ஜூலை 11- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள 57 பகுதி களை கட்டுப்பாட்டு மண்டலங்களாக மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் அறி வித்துள்ளார்.  இந்தப் பகுதியில் அத்தியா வசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரி வித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிப்புகள் அதிகரித்துள்ள 57 பகு திகள் வரும் ஜூலை 12-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக்கப்பட் டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு : இராஜபாளை யம் செட்டியார்பட்டி, கலிங்கபேரி, திரு வில்லிபுத்தூர் ஒன்றியம் கூனங்குளம், வத்தி ராயிருப்பு ஒன்றியம் மேலகோட்டையூர்,  சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோவில், சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி, ரிசர்வ் லைன், எம்.புதுப்பட்டி, பாறைப்படடி, பேரா பட்டி, சீதக்காதி தெரு, முஸ்லீம் தெரு,  காளியப்பா நகர், சாட்சியாபுரம், விஸ்வ நத்தம், வெம்பக்கோட்டை ஒன்றியம் பனை யடிபட்டி, கட்ட பொம்மன் தெரு, சாத்தூர் ஒன்றியம் போத்திரெட்டியபட்டி, படந்தால், பங்களா தெரு, முனிசிபல் கோர்ட் தெரு, விருதுநகர் ஒன்றியம் ஆமத்தூர், அண்ணா மலை செட்டியார் தெரு, மொன்னி தெரு, அல்லம்பட்டி,  முத்துராமன்பட்டி சிவந்தி புரம், பர்மாகாலனி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ காலனி, பாண்டியன் நகர், ரயில்வே பீடர் சாலை, அய்யனார் நகர், ஓ.கோவில்பட்டி, சத்திரரெட்டிபட்டி, மெட்டுக்குண்டு, திருச்சுழி ஒன்றியம் ஆலடிபட்டி, பொம்மகோட்டை, கத்தாளம்பட்டி, மிதலை குளம், உலக்குடி, வீரசோழன், அ.முக்குளம், அருப்புக்கோட்டை ஒன்றியம் கொப்பு சித்தன்படடி, பாலையம்பட்டி, சொக்கலிங்க புரம், வேலாயுதபுரம் பள்ளிக்கூடத் தெரு, திருநகரம், திருமேனி தெரு, பாலவநத்தம் வடக்குபட்டி, இ.பி காலனி கோபாலபுரம்.  மேற்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாட் டம், வாகனப் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகள் நோய் தொற்று முடியும் வரை முற்றிலுமாக தடை செய்யப்படு கிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் வெளியே வரும் நபர்கள் முகக் கவசம் அணி வது கட்டாயம். மருந்தகங்களில் மருத்து வர்களின் சீட்டின் அடிப்படையிலேயே மருந்து கள் விநியோகம் செய்ய வேண்டும் எனத் தெரிவிததுள்ளார்.  மக்களுக்கு கபசுர குடி நீர் வழங்கவும், மருத்துவ முகாம்கள் அமைக் கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.