tamilnadu

img

அரசுப் பள்ளிகளையே விரும்பும் கேரள மக்கள் ஜி.ராமகிருஷ்ணன் பெருமிதம்

விருதுநகர், அக்.2- கேரளாவில் ஐந்து லட்சம் மாண வர்கள்  தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி னார்.  விருதுநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-  முன்னாள் முதல்வர் காமராஜர் ஏழை, எளிய வீட்டுக் குழந்தை களுக்கு கல்வி கிடைக்க வேண்டு மென்பதற்காக ஏராளமான பள்ளிக் கூடங்களை கட்டினார். மதிய உண வுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட்டுகள் இந்தத் திட் டத்தை ஆதரித்தோம்.  தற்போது, மத்திய பாஜக அரசு, புதிய கல்விக் கொள்கை- 2019 வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. இதை எதிர்த்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கல்வி யாளர்கள், மாணவர்கள், ஆசிரி யர்கள் போராடி வருகின்றனர். வரைவு இன்னும் சட்டமாக்கப்பட வில்லை. ஆனால்,  அதிமுக அரசு வரைவு அறிக்கையை அமல்படுத் தும் விதமாக அரசுப் பள்ளிகளை மூடி  வருகிறது. அரசுப் பள்ளிகளை மூடி அதை நூலகமாக மாற்று வோம் என அறிவித்துள்ளது.  ஆனால், கேரளாவில் இடதுசாரி அரசு அரசுப் பள்ளிகளை மேம் படுத்தியுள்ளது. கடந்த மூன்றாண்டு களில்  500 தனியார் பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. அங்குப் படித்த 5 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ள னர். இது பினராயி விஜயன் தலை மையிலான அரசின் சாதனையா கும்.  காஷ்மீர் மாநிலத்தின் 370- வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதைப் போல் வடகிழக்கு மாநிலங்க ளுக்கும் சிறப்பு அந்தஸ்து உள் ளது. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள காரணத்தால் காஷ்மீரத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பாஜக பிரித்துள்ளது. இதே நிலை நாளை, தமிழகத்திற்கும் வரலாம்.  நாடு விடுதலை பெற்று இந்தியா -பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்த போது மதக் கலவரங்கள் மூன்டன. எனவே, மகாத்மா காந்தி கொல்காத்தாவிற்குச் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  இதையடுத்து அங்கு கலவரம் அடங்கியது.  ராணுவத்தால் சாதிக்க முடியாததை மகாத்மா காந்தி சாதித்துவிட்டார் என மௌன்ட் பேட்டன் பிரபு தெரி வித்தார். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை பாதுகாக்க  காந்தி விரும்பினார். அதனாலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்- காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்.  மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்துவது மக்கள் ஒற்றுமை யைச் சீர்குலைப்பதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. அவற்றைப் பாதுகாக்க தொடர்ந்து போராடும் என்றார்.