விழுப்புரம், டிச.5- செயிண்ட் ஜான் ஊனமுற்றோர் சங்கம் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி இணைந்து விழுப்புரம் இந்திரா நகரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு இலவச பல் சிகிச்சை முகாம் நடத்தின. முகாமிற்கு செயிண்ட் ஜான் அறக்கட்டளைத் தலைவர் ஏ.ஜெயச்சந்திரன், புவனா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரி யர் லட்சுமி தேவி வரவேற்றார். முகாமில் மருத்துவர் தாமரை தலைமையில் மருத்து வர்கள் ஷோபனா, சண்முகவேல், துரைமுரு கன், அரவிந்தன், ஆர்த்தி,ரிஸ்வானா, ஸ்ரீபதி, அஷ்யா, தாரணி, சுவேத்தாம்பரி, சுந்தரவடிவு ஆகியோர் கொண்ட குழுவினர் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர் களுக்கு இலவச பல் சிகிச்சை அளித்தனர்.