விழுப்புரம், ஜூன் 28- விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கொரோனா தொற்றால் 765 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 452 பேர் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) உயிரிழந்தது. திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தையைக் காய்ச்சல் காரணமாக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு நடத்தப்பட்ட பரி சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி யானது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.