சென்னை,பிப்.6- பழங்குடியின சிறுவனை தனது செருப்பை கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செயலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ரெஜீஸ்குமார், செய லாளர் பாலா ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு செல்லும்போது பழங்குடியின சிறு வனை ஒருமையில் பேசி அழைத்து செருப்பை கழற்றச் சொல்லி யுள்ளார். அச்சிறுவன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருடைய முன்னிலையிலும் இப்பணியை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளான். இத்தகைய அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. இச்செயலை செய்த அமைச்சர் மன்னிப்பு கேட்ப துடன், தார்மீக பொறுப்பேற்று ராஜி னாமா செய்திட வேண்டும். தமிழக அரசு சம்மந்தப்பட்ட அமைச்சர் மீது எஸ்.சி, எஸ்.டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டும். அமைச்சருக்கு அறிவு புகட்டுவதற்கு ஏற்ப அறிவுசார் புத்த கங்களை அனுப்புகின்ற இயக் கத்தை மாநிலம் முழுவதும் உடனடி யாக நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.