tamilnadu

img

வாழ்வாதாரம், ஜனநாயக உரிமை கோரி நாடு முழுவதும் பெண்கள் போராட்டம்

தமிழகத்தில் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஆக.28- வாழ்வாதாரம், ஜனநாயக உரிமை கோரி ஆகஸ்ட் 28 வெள்ளியன்று நாடு முழுவதும் பெண்கள்  எழுச்சிகரமான போராட்டத்தை நடத்தி னர். தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேள னம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாழ்க்கைக்கான வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தை  ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று நடத்த  அகில இந்திய அளவிலான பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனடிப்படையில்  தமிழ்நாட்டில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் எழுச்சியுடன் போராட்டம் நடைபெற்றது. 

அதிகரித்துவரும் கொரோனா, தொடரும் ஊரடங்கு ஆகியவை சாமானிய மக்களின் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப் பெரும்பான்மை யான மக்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் வாழ்வா தாரத்தை இழந்து,அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள னர் வேலையின்மை மருத்துவ சேவையில் தனியார்மயம் போன்றவற்றால் பெண்களும் குழந்தை களும் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதற் கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பொருட்படுத்தா மல் நுண் நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழு பெண் களை மிரட்டுவது தொடர்கிறது. மக்களின் பிரச்சனை களை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவான தனியார்மயத்தை அமல்படுத்த பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜனநாய கத்தின் மீது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. ரேசன் மற்றும் ஓய்வூதியத்திற்கு ஆதார் அட்டை யைக் கட்டாயமாக்கக் கூடாது. ஏழை எளிய மாண வர்களின் கல்வியை ஊக்குவிக்க மடிக்கணினிகள், கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டிகளை பி.எம். கேர்ஸ்  நிதியிலிருந்து வழங்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் தனியாரை அனுமதிக்கக்கூடாது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்  கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை திறம்பட செயல்படுத்த அதற்குத் தேவை யான அமைப்பு மற்றும் வழிகாட்டு முறைகளை உரு வாக்குவதற்கு பட்ஜெட்டில் தனி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.நிர்பயா நிதியை வேறு எதற்கும் பயன் படுத்தாமல் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண் களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

20 மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட  மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான சுதா சுந்தரராமன் மற்றும் மாநில தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.