tamilnadu

img

கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, பிப். 15- சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதா னவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற தமிழக  அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு காவல்துறை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக ரீதியாகப் போராடியவர் களை, வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்கு திருப்பியதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கியதாக தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தேசிய  குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் முஸ்லீம் அமைப்புகள் சார்பாக சென்னை  தண்டையார் பேட்டையில் நடந்த போராட்  டங்களுக்கு இடதுசாரி கட்சிகளும் இதர  அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரி வித்துள்ளன.  போராடியவர்கள் மீது  காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதலை கடுமையாக கண்டிப்ப தும் இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும்”என்றும் வலி யுறுத்தியிருக்கிறார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வண்ணாரப்பேட்டையில் காத்தி ருப்பு போராட்டம் நடத்திய பெண்கள் மீதும்,  அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த ஆண்கள் மீதும் தமிழக காவல்துறை கொடூர மான முறையில் தாக்குதல் நடத்தி கலைக்க  முயற்சித்துள்ளனர். இதில் பலபேர் மண்டை உடைந்து படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்களை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த  காட்டுமிராண்டித் தனத்தை  கண்டிப்பது டன், தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறை யினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் வலியுறுத்தி யுள்ளனர்.