சென்னை,டிச.20- மத்திய பாஜக அரசின் வஞ்ச கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகி றார்கள். அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்க ளாக மாணவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி னர். அரசு கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் கல்லூரி மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத் தலைநகர் சென்னை யில் கல்லூரிகள் மட்டுமின்றி பல்க லைக் கழக மாணவர்களும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தை தீவிர மாக்கியுள்ளனர். இந்த போராட் டம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அமைச்சர்கள் ஜெயக் குமார், வேலுமணி உள்ளிட்ட பல ரும் தில்லியில் முகாமிட்டுள்ள னர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகி யோரை சந்தித்து பேச்சு நடத்து கிறார்கள். இதற்கிடையே, தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை சமாளிக்க முடியாத கல்லூரி மற்றும் பல்கலைக் கழக நிர்வா கங்கள் கிறிஸ்துமஸ், உள்ளாட் சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரைக்கும் தொடர் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங் கள் திறக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.