திண்டுக்கல், செப்.2 திண்டுக்கல்லில் தடை மீறிய இந்து முன்னணியினரின் விநாயகர் சிலையை காவல்துறையினர் பறி முதல் செய்து தெப்பத்தில் கரைத்த னர். திண்டுக்கல் பாறைப்பட்டியில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திங்களன்று இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். பின்னர் அதை பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். இதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். ஆனால் அவர்கள் தடையை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்க முயன்றனர். இதையடுத்து விநாயகர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர் சிலை யை கோட்டைக்குளத்தில் கரைத் தனர். தடையை மீறிய இந்து முன்ன ணியின் மாவட்ட அமைப்பாளர் சங்கர்கணேஷ் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப் பட்டனர்.
இந்த நிலையில் ஊர் மக்கள் சார்பாக மற்றொரு விநாயகர் சிலை மாலையில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதையும் பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக எடுத்துச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறை சமூக பதற்றம் உரு வாக வாய்ப்புள்ள இடத்தில் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்க அனுமதித்து வருகிறது. கடந்தாண்டு பாறைப்பட்டி கிராம மக்கள் சார்பாக பேகம்பூர் பள்ளி வாசல் வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்றனர். பாறைப்பட்டி க்கு அருகில் உள்ளது கோட்டைக் குளம்.
ஆனால் பள்ளிவாசல் பின்புறம் உள்ள பாதையை பயன்படுத்தாமல் பள்ளிவாசலின் முன்புறவாசல் வழி யாக செல்ல அனுமதித்து காவல் துறையே பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் நகரில் கடந்த காலங்களில் நிகழ்ந்த விரும்பத் தகாத சம்பவங்களை கவனத்தில் கொண்டு காவல்துறை செயல்பட வேண்டும். முன்பு நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் இன்றைய மாவட்ட காவல்துறைக் கண்காணிப் பாளர் சக்திவேலுக்கோ, திண்டுக்கல் சரக துணைத்தலைவர் ஜோஷிக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாறைப்பட்டி ஊர் மக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டாலும் அதை பள்ளிவாசல் வழியாக கொண்டு செல்லவேண்டிய அவ சியம் இல்லை. ஏதேனும் விரும்பத் தகாத சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். பாறைப்பட்டி விநாயகர் சிலையை கோட்டைக் குளத்தில் கரைப்பதற்கு பள்ளிவாசல் வழியாகத்தான் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. (ந.நி)