tamilnadu

img

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

செஞ்சி,ஏப். 21- விழுப்புரம் மாவட்டம், மேல்மலைய னூர் வட்டத்திற்குட்பட்ட அன்னமங்கலம் கிராமத்தில் காசிநாதன் என்பவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதில் அப்பகுதி உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த மான் ஒன்று தவறி விழுந்து கிணற்று நீரில்  இருந்து மேலே வரமுடியாமல் தத்தளித்து  உள்ளது. இதனை பார்த்த அன்னமங்கலம் கிராமத்தினர் மேல்மலைய னூர் தீய ணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும்  வளத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையி னர் மற்றும் காவல்துறை, செஞ்சி வனத்  துறை, வருவாய்த்துறையை சேர்ந்தவர் கள் கிணற்றில் உள்ள மானை பாதுகாப் பாக மீட்டனர். பின்னர் மானை செஞ்சி  வனத்துறையினர் செஞ்சி காப்புக்காட்டில் விட்டனர்.