tamilnadu

img

ரூ.1000 பொங்கல் பரிசு: முதலமைச்சர் அறிவிப்பு

 சென்னை,நவ.26- பொங்கலை முன்னிட்டு,  ரேசன் அரிசிஅட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா 1000 ரூபா யுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு வழங்கப்  பட்டதைப் போலவே இந்த ஆண்டும்  ரேசன் அரிசி அட்டை தாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங் கப்படும் என அறிவித்தார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, திராட்சையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும்  வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.