tamilnadu

img

அரசியல் பழிவாங்கும் போக்கை சட்டப்படி சந்திப்பேன் மா.சுப்பிரமணியன்

சென்னை,நவ.3- அரசியல் பழிவாங்கும் போக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏவுமான. மா.சுப்பிர மணியன்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மா.சுப்பிர மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- நாங்கள் 24 ஆண்டு காலமாக கிண்டி தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறோம். மேற்படி சொத்தின் அடிமனை மொத்தம் 1725 சதுர அடிகள் மட்டுமே. இந்த சொத்தின் அடிமனை சிட்கோவிற்கு சொந்தமானது. தற்போதும் சிட்கோ வின் பெயரில்தான் அடிமனை உள்ளது. எங்களுடைய பெயருக்கு மாற்றப்படவில்லை. கடந்த சட்டமன்றத்தேர்தலில் சொத்து விவர பிரமாணப் பத்திரத்திலும் இதை தெரிவித்துள்ளேன். நாங்கள் இப்போதும், அடி மனைச் சொந்தமில்லாத தொழி லாளர் குடியிருப்பில் தான் வசித்து வருகிறோம். இதில் மோசடி செய்வதற்கோ, பொய் ஆவணங்க ளைத் தயாரிப்பதற்கோ, ஆக்கிர மிப்பு செய்வதற்கோ எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.  20 முதல் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் அடி மனைகளை உரிமையாக்கித்தர வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசு கண் மூடித்தனதாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதை கிரிமினல் வழக்காகவும், பூதாகரமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது. பொய்யாக புனையப்பட்ட இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

;