tamilnadu

img

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை,செப். 8 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை யில் வைக்கப்பட்டிருந்த 2350 சிலைகள்  பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. பட்டினம் பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளும்  பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருவல்லிக்கேணி,ஐஸ் அவுஸ் ஆகிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டி ருந்தனர்.

;