அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட துறை மற்றும் அந்தந்த ரேசன் கடை அதிகாரிகள் பெற்றுச் சென்று பல நாட்களாகியும் இதுவரைக்கும் அந்தத் தொகை வழங்காமல் அலைக்கழித்து வருவதால் கோபமடைந்த முண்டியம்பாக்கம், கொசப்பாளையம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எஸ்.நாகலிங்கம் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஒன்று கூடி சமூக விலகலை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். பூமாதேவி, லட்சுமி, பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.