tamilnadu

img

கொரோனா தடுப்பு ஊசி ஆறு மாதத்தில் தயாராகிவிடும்

லண்டன்:
கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பருக்குள் தயாராகி விடுமென பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசித் துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு எதிராக 80 சதவீதம் தடுப்பூசி செயல்படுமென நம்பிக்கை உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்தும் தயாராகி விடும். இது ஒரு வெறும் கூச்சல் அல்ல. ஒவ்வொரு வாரமும் கடக்கும் போது தங்களிடம் கூடுதல் தரவுகள் இருக்கிறது'. இவ்வாறு அவர் கூறினார்.
 

;