tamilnadu

img

லட்சத்தீவு அருகே படகுகள் பழுதானதால் கடலில் 20 மீனவர்கள் சிக்கித் தவிப்பு

கவரட்டி:
லட்சத்தீவு அருகே கடலில் சிக்கிதவிக்கும் 20 மீனவர்களை மீட்க கடலோர காவல் படையினர் விரைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த மே 2ம் தேதி, இரண்டு விசைப்படகுகளில் 20 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில் லட்சத்தீவு அருகேதித்திரா தீவு பகுதியில் இருபடகுகளும் எதிர்பாராதவிதமாக பழுதடைந்தது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 பேர், ஆந்திரத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம்20 மீனவர்களும் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் அவர்களை மீட்க லட்சத்தீவு அருகே உள்ள கவரட்டி தீவில் இருந்து கடலோர காவல் படையினர் விக்ரம் என்ற கப்பலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இத
னால் மீனவர்கள் விரைவில் பத்திரமாக கரை சேர்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.
 

;