தமிழக மின்வாரியத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறி, அதை எதிர்கொள்ள புதிய இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம் மின் பயன்பாட்டு வைப்புத் தொகை ஆகியவற்றிற்கான கட்டணத்தை அதா வது வீட்டு மின்சார இணைப்புக்கான பதிவு கட்டணத்தை ரூ.50லிருந்து ரூ. 400 ஆகவும், ஒரு முனை இணைப்புக் கான வைப்புத்தொகை ரூ.200லி ருந்து, ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.600லிருந்து ரூ.1800ஆகவும், தொழிற்சாலைக்கு குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான வைப்புத் தொகையை ரூ.600லிருந்து ரூ.2000 ஆகவும், அதிக அழுத்தத்திற் கான வைப்புத்தொகை ரூ.800 லிருந்து ரூ.3100 ஆகவும் உயர்த்திட தமிழக அரசு முனைப்பு காட்டி வரு கிறது. அதேபோல, மின் இணைப்பு வழங்குவதற்கு இடத்தை ஆய்வு செய்ய இதுவரை கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் இனிமேல் அப்படி ஆய்வு செய்வதற்கு கூட ஒரு முனை இணைப்புக்கு 580 ரூபாய், மும்முனை இணைப்புக்கு ரூ.1520 கட்டணமாக வசூலிக்கவும் முடிவு செய்து, மக்களின் கருத்து கேட்பு என்ற நாடகத்தை சென்னையில் செப்டம்பர் 25 அன்று (நாளை) அரங்கேற்ற உள்ளார்கள்.
உத்தேசித்துள்ள கட்டண உயர்வுகளை பார்க்கின்ற போது, தற்போதுள்ள கட்டணத்திலிருந்து 5 மடங்கு முதல் 8 மடங்கு வரை கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டது தெரிய வருகிறது. பல கோடி ரூபாயை மின் நுகர்வோர் மீது கட்டண சுமையாக ஏற்றிட உள்ளார்கள் என்பது தெளிவாகி உள்ளது. ஓராண்டுக்கு 6லட்சம் முதல் 8 லட்சம் மின் நுகர்வோர்கள் மின்வாரி யத்தோடு இணைய உள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது, வாரியம் அபரிமிதமாக நிர்ணயிக்கும் மின் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், வளர்ச்சி கட்டணம், இன்சூரன்ஸ் கட்ட ணம், வைப்புத் தொகை கட்டணம் போன்றவற்றைச் செலுத்த வசதி உள்ளவர்களுக்கே மின்சாரம்; வசதி இல்லாதவர்கள் மின்சாரத்தை நுகரவே முடியாத நிலையை ஆளும் அரசுகள் உருவாக்கி வருகின்றன.
சுருங்கச் சொன்னால், தமிழக அரசு நேரடி மின் கட்டண உயர்வுக்கு பதி லாக மற்ற பணிகளுக்கான கட்ட ணத்தை உயர்த்துவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சுமையை மின் நுகர்வோர்கள் மீது சுமத்த உள்ளது. 2010ஆம் ஆண்டும் இதே யுத்தி யை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாயை மின் நுகர்வோர்களி டமிருந்து வசூலித்துள்ளது என்பதையும் நாம் மறக்க இயலாது.
மின் கட்டணம், இணைப்புக் கட்டணம் உயர்வுக்கு அரசு கூறும் காரணங்கள் வர்தா, கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகி உள்ளது; அதை ஈடு கொள்ளவே கட்டண உயர்வுகள் எனக் கூறுகிறார்கள். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க வேண்டுமே தவிர, பருவ காலங்களில் ஏற்படும் செலவுகளுக்கு நிரந்தர ஆதாரமாக உள்ள மின் கட்டண உயர்வு என்பதைக் கையாளக் கூடாது. மேலும் மின் விநியோக கட்ட மைப்பில் நட்டம் ஏற்படுகின்ற போது அதை தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகிற உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டுவிட்டு, இப்போது அந்த சுமையை நுகர் வோர் தலையில் ஏற்றுவது அநியாய மானது. மாறாக மின் இணைப்புக் கான கட்டணத்தை உயர்த்தியே தீரு வேன் என்று தமிழக அரசு முடிவெடு க்குமானால், தொழில்வளர்ச்சி பாதிப்பு, ஆலை மூடல், ஆட்குறைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் கொந்தளிப்புடன் வீதியில் இறங்குவார்கள் என்பது திண்ணம்.
எஸ்.எஸ்.எஸ்.