tamilnadu

img

ராஜஸ்தான் பேருந்து விபத்தில் 14 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ தங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்த போது, அதே பாதையில் வந்த சரக்கு லாரி பேருந்தின் மீது திடீரென மோதியது. அதிவேகத்தில் லாரி மோதியதால் பேருந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 

;