tamilnadu

img

ராஜஸ்தான் சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலி

ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மர்  ஜோத்பூர் சாலையில் தாதனியா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து மீது கேம்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.