tamilnadu

img

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் 10 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக ஏவியது - இஸ்ரோ 

10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இன்று மதியம் 3.12 மணியளவில் 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி 49 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ராக்கெட் ஆகும்.

பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

இந்த 10 செயற்கைக்கோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டது.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று 4-வது நிலைக்கான எரிபொருளை நிரப்பும் பணியை நிறைவு செய்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். திட்டமிட்டபடி, 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு பிஎஸ்எல்வி சி.49 ரக ராக்கெட் சரியாக 3.12 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. முதலில் 03.02 மணிக்கு ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 செயற்கைக் கோள்களுடன் இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.