tamilnadu

img

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மையுடன் கூடிய முத்திரை...  மராட்டிய அரசு உத்தரவு 

மும்பை
வெளிநாடுகளிருந்து வரும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர்  தீவிர சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சந்தேகத்தின் பேரில் பலர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 7 பேர் தப்பிச்சென்றுவிட்டனர்.  

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களின் கையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள், எத்தனை நாட்களுக்குத் தனிமையில் இருக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் (தேதியையும் சேர்த்து) அழியாத மையுடன் கூடிய முத்திரையைக் குத்துமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  

தனிமைப்படுத்தப்பட்டவர்களைப் பொதுமக்களே அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனிமையில் இருக்க வேண்டியவர்கள் பொது இடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;