tamilnadu

img

55 வயதிற்கு மேற்பட்ட போலீசார் பணிக்கு வரவேண்டாம்... மும்பை காவல்துறை உத்தரவு

மும்பை: 
கொரோனா வைரஸால் மூன்று காவலர்கள் மும்பையில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 50 வயதைக் கடந்தவர்கள். இதையடுத்து   55 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தாக்கம் முற்றாக தீரும் வரை அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என மும்பை காவல்துறைத் தலைவர் பரம் பிர் சிங் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் 55 வயது நிரம்பிய காவலர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

;