tamilnadu

img

கொரோனா பாதிப்பு உறுதியான 70 பேரை காணவில்லை...  மும்பை மாநகராட்சி தகவல்

மும்பை
நாட்டின் கொரோனா மையமான மகாராஷ்டிராவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பை மாநகரம் கொரோனாவால் உருக்குலைந்துள்ளது. இதுவரை அங்கு 40 ஆயிரத்து 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,154 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 ஆயிரத்து 212 பேர் கொரோனாவை வென்றுள்ளனர். 

இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட மலாட் பகுதி வடக்கு வார்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த 70 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை காணவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்போது மொபைல் போன் இருப்பிடம் மற்றும் சி.டி.ஆர். ஆகியவற்றின் வழியே கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.  மும்பை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

;