tamilnadu

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார் சுஷில்குமார்

புதுடெல்லி, 

உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் இடம் பிடித்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை முடிவு செய்வதற்காக இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இதில் 74 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ஜிதேந்தர் குமார் ஆகியோர் மோதினார்கள். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுஷில்குமார் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஜிதேந்தர்குமாரை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தகுதியானார்.
 

;