“பாஜகவின் மிரட்டல்- உருட்டல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, மே 3- சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், சனிக்கிழமை யன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: “பாஜக தமிழ்நாட்டில் எப்படி யாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சு றுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணி யை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலை மைக்கே சிக்கல் வரும் என்று பயப்படு கிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றதை போல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். பாஜகவைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் - மிரட்டல் - உருட்டல் அனைத்துக்கும் உண்மை யான காரணம் என்ன என்பது மக்க ளுக்குத் தெரியும். எனவே, பாஜக வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதி யாக நாம் எதிர்கொள்வோம். இவ்வாறு முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, ஒன்றிய பாஜக அரசு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துகிறது. அதிகார அத்து மீறல்களைச் செய்கிறது. அவற்றை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணை கொண்டும் எதிர்கொள்வது எனவும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை மதுரை மாநகரில் ஜூன் 1 அன்று நடத்துவது என்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.