tamilnadu

img

“தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்”

“தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்”

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி! 

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறி யடித்து, விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும் என அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள சமூக வலைதள பதிவில், “எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடி யாகத் திகழும் திமுக அரசு, தமிழ் நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025. கடந்த 2  ஆண்டுகளுக்கு மேலாக இதற் கானத் திட்டமிடல்களும் தயாரிப்பு களும் மேற்கொள்ளப்பட்டு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன் இந்தக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐஐடி சென்னை யின் startup ஆன Agnikul உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ்நாட்டு நிறு வனங்களுடன் இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் அடுத்த பல  ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை  அளிக்கும் மகத்தான முயற்சிக்கான ஏவுதளமாக விண்வெளித் தொழில் கொள்கை 2025 அமைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத எதிர்கட்சிகள், நம்பி நாராயணன் அவர்கள் ஆலோ சகராக இருக்கும் ஒரு நிறு வனத்தோடு கோர்த்து பேசுவது  அற்பமான செயல். எந்தவித முதலீ டும் செய்யாத அந்த நிறுவனத்திற் கும் இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு இந்த வீணர்கள் கொடுக்கும் பரிசா இது.  கீழ்த்தரமாக தமிழ்நாட்டின் வளர்ச்சி  மீது சேற்றை அள்ளி வீசும் அற்பர்கள்  தங்களது கேவலமான அரசியல் போக்கை நிறுத்துவது நல்லது. அதே போல நம்மை பார்த்து காபி  அடித்து குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது.  அப்போது அது அடிமைகளின், முத லாளிகளின் நண்பர்களுக்காகவா? தமிழ்நாடு அவர்களை விட சிறப்பான  ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் கார ணமாகவா? தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்லது  நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இந்த விண் வெளித் தொழில் கொள்கையை விமர்சித்து கொச்சைப்படுத்துவதாக நினைத்து ஐ.ஐ.டி. வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களின் இளம்  தமிழர்கள், வேலைவாய்ப்பு பெற விருக்கும் மகளிர்-இளையோர் ஆகி யோரையும் சேர்த்து கொச்சைப் படுத்துகிறது. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப  நினைக்கும் பொய்களை முறிய டித்து, விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும். தமிழ்நாட் டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்” என்று  கூறப்பட்டுள்ளது.