tamilnadu

img

‘நாடு முழுவதற்கும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்துவது கூடாது!’

‘நாடு முழுவதற்கும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்துவது கூடாது!’

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

திண்டுக்கல், மே 9 - “நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசு நடத்தும் போர் ஒத்திகை என்பது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் செயலாக உள்ளது” என்று, பெ. சண்முகம் கூறினார். திண்டுக்கல் சிறுமலையில் வெள்ளியன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செந்தொண்டர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்க ளைச் சந்தித்தார். அப்போது, “பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய அரசாங்கம் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அவசியம்தான், ஆனால் நாடு முழுவதும் போர்ப் பதற்றத்தை உருவாக்குவதை ஒன்றிய அரசு தவிர்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடை பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை வன்மையா கக் கண்டித்த அவர், “அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டது, சகித்துக்கொள்ள முடியாதது. பயங்கரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு உண்டு,” என்றார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பங்கேற்காதது ஏன்? இந்த விவகாரம் தொடர்பாக, “பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டங்களில் பங்கேற்காதது  சரியல்ல. இந்திய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாடே பேசிக்கொண்டிருக் கும்போது, ஏன் பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுகிறது,” என்று சண்முகம் கூறினார். “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஒரு முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா? 200 கி.மீ தூரத்தில் ஊடுருவி எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் அவர் மேலும் பேசுகையில், “தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போரா டிப் பெற்ற சலுகைகளை, தொழிற்சங்க சட்டங்க ளை அடித்து நொறுக்கி, மோடி அரசானது தற் போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுக ளுக்கும் ஆதரவான - தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றி யுள்ளது,” என்றார். “இந்த சட்டங்கள் இன்னும் அமலாக்கப் படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கி றோம்,” என்று அவர் வலியுறுத்தினார். மே 20 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு “மே 20 அன்று நடைபெறும் வேலைநிறுத் தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்பட அனை த்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டு மக்கள் இந்த வேலைநிறுத்தத்தி ற்கு பேராதரவை அளிக்க வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். வெறுப்பு அரசியலுக்கு  எதிராக நடைபயணம் “ஒன்றிய பாஜக அரசின் வகுப்புவாத, வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், மக்களி டையே மதச்சார்பின்மை, ஒற்றுமைக்கு ஆத ரவாகவும் தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 11 முதல் 20 வரை 10 நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்த உள்ளோம்,” என்று அவர் அறிவித்தார். நிரந்தர வேலை,  ஊதியம் வழங்க வேண்டும் “ஒன்றிய அரசைப் போலவே, தமிழக அரசும் தாராளமய, தனியார்மய கொள்கைக ளைப் பின்பற்றுகிறது. அனைத்து பணியிடங்க ளிலும் ஒப்பந்த முறை, அவுட்சோர்ஸ் முறை, தொகுப்பு ஊதியம் என்ற பெயரில் பணிய மர்த்தப்படுகிறது. நிரந்தர பணியிடங்களை எதிர்பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நிரந்தர பணியிட நியமனமும், நிரந்தர ஊதியமும் வழங்க முன்வர வேண்டும்,” என்று அவர் கோரினார். பஞ்சமி நிலங்கள், நீர்நிலை குடியிருப்புகள் குறித்த கவலை பஞ்சமி நிலங்கள் மீட்பு, நீர்நிலைப் புறம்போக்கில் வசிப்பவர்கள் விவகாரம் குறித்தும் பெ. சண்முகம் பேசினார். “பட்டியல் சமூகத்தினருக்கு உரிமையான பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. நீர்நிலைகளில் வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றும்போது, அதே இடங்களில் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் கட்டப்படு கின்றன. இது முரண்பாடானது. இந்த மக்க ளுக்கு குடியுரிமை உண்டு என்ற அடிப்படை யில் அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம், மாவட்டச் செயலாளர் கே.பிரபா கரன் ஆகியோர் உடனிருந்தனர்.