tamilnadu

தமிழகத்தில் விரைவில் ‘சைகோவ்-டி’ தடுப்பூசி

சென்னை, டிச.3- சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரி வித்துள்ளனர். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு செலுத்திவரும் நிலையில், மூன்றாவதாக சைகோவ்-டி தடுப்பூசி 7 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட வுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சைடஸ் கேடிலா நிறு வனம் ஒன்றிய அரசிடம் தடுப்பூசியை வழங்க உள்ள  நிலையில், தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப்,  உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செலுத்தப் படவுள்ளது. 28 நாட்கள் இடைவெளியில் 3 டோஸ்களாக செலுத்தப்பட உள்ள சைகோவ் டி தடுப்பூசியின் 11 லட்சத்து 60 ஆயிரம் டோஸ்கள் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

;