tamilnadu

img

‘சாதனை மாணவர்களை உருவாக்குவோம்’

புதுக்கோட்டை, ஜன.3 - எதிர்கால இந்தியாவை சிறந்த  முறையில் கட்டமைக்கும் வகையில் சாதனை மாணவர்களை உருவாக்கு வோம் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை.  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ஸ்மார்ட் வகுப்பை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராள மான கனிம வளங்களும், கடல்வளங் களும், விவசாய வளங்களும் நிறைந்து  கிடக்கிறது. ஆனாலும், தொடர்ந்து மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. மாவட்டத்தில் கிடைக்கும் வளங்களை முறையாக பயன் படுத்தும் வகையில் போதுமான தொழிற் சாலைகளோ, துறைமுகங்களோ, விமான நிலையங்களோ இல்லை. இதிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர மாணவ சமுதாயம் சிந்திக்க வேண்டும். அதற்கு ஆற்றல்மிக்க ஆளுமைகளாக மாணவர்கள் உரு வாக்கப்பட வேண்டும். அதற்கு இது போன்ற ஸ்மார்ட் வகுப்புகள் பேருதவி யாக இருக்கும். ஏழை, எளிய மாணவர்களின் வளர்ச்சியில் என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மக்களோடு இணைந்து மேற்கொள்வேன்” என்றார். நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவ.திருமேணிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, மாவட்டக் கல்வி அலு வலர் மஞ்சுளா,  சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தலைமை ஆசிரியர் எம்.ராஜேன்திரன் வரவேற்க, உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.கங்கை அரசன் நன்றி கூறினார்.