tamilnadu

img

தலைவர்கள் கைதுக்கு கண்டனம்: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாலிபர்கள்

சென்னை, ஜன. 21- தீண்டாமையின் அடையாள மான குடிதண்ணீர் தொட்டியை இடிக்கவும்  மலத்தை கலந்த கய வர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட் டம் அறிவித்த வாலிபர் சங்க தலை வர்களை முன்னெச்சரிக்கை என்று கைது செய்த காவல் துறையை கண்டித்து சென்னை யிலுள்ள டிஜிபி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் குடிக்கும் தண்ணீரில் ஆதிக்க சக்திகளில் சிலர் மலத்தை கலந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை தலையீட்டின் பேரில் மாவட்ட நிர்வாகம் உடன டியாக சில நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் இது வரைக்கும் கைது செய்யப்பட வில்லை. அந்த குடிநீர்  தொட்டியும் இடிக்கப்பட வில்லை.

 இந்நிலையில், மலம் கலந்த  குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், தீண்டாமையின் அடையாளமான  குடிநீர் தொட்டியை இடிக்கும் போராட் டத்தையும் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் அறிவித் திருந்தது. இந்த நிலையில், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தலைவர்களை முன்கூட்டியே கைது செய்தனர். காவல்துறை யினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் சனிக்கிழமையன்று (ஜன. 21) காவல்துறை தலை வர் அலுவலகம் முற்று கையிடப்பட்டது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், நித்தியராஜ், பார்த்திபன், அபி ராமி, தமிழ்செல்வி, மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி, மாண வர் சங்க நிர்வாகிகள் மிருதுளா, காவியா, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.