tamilnadu

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நியமனத்தை உடனே மேற்கொள்க!

சென்னை,மார்ச் 12- கிடப்பில் போடப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நியமனத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த ஆட்சியில் 2018 பிப்ர்வரி 14 ஆம் தேதி மோட்டார் வாகன துறை யில் காலியாக இருந்த 110  மோட்டார் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவ தற்காக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. சுமார் 2300 பேர் விண் ணப்பித்ததில் 1,300 பேருக்கு தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டு 2018  ஜூன் 10 அன்று தேர்வு நடைபெற்றது.  தங்கள் தகுதிகளை நிரூபிக்க விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த சான்றி தழ்களை மோட்டார் வாகன வகுப்பு அதிகாரிகள் சரிபார்த்ததில் பலரும் போ லியான சான்றிதழ்கள் சமர்ப்பித்தி ருந்தது கண்டறியப்பட்டது. சமர்ப்பிக் கப்பட்ட சான்றிதழ்களின் உண்மை தன்மையை அப்போதைய போக்கு வரத்து ஆணையாளராக இருந்த சமய மூர்த்தி வழிகாட்டுதலின் அடிப்படையில்  மூன்றுகட்டங்களாக ஆய்வுகள் நடத் தப்பட்டன. இச்சோதனைகளின் அடிப்ப டையில் 32 நபர்கள் மட்டும் நேர்முக தேர்வுக்கு தகுதியானவர்களாக கண்டறி யப்பட்டு 2019 ஜூலை 15ஆம் தேதி அறி விப்பு வெளியானது. தொடர்ந்து 2019 ஆகஸ்ட் 5 நேர்முக தேர்வு நடைபெற்றது.

இதனிடையே தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டோர் நீதிமன்றத்தை நாடி நேர்முக தேர்வு முடிவுகளை  வெளி யிட தடை உத்தரவு  பெற்றனர். தொடர்ந்து  நீதிமன்றம் முடிவுகள் வெளியிட அனுமதி அளித்த பின், தேர்வு செய்யப்பட்ட 32 பே ருக்கும் பணி நியமன ஆணை நவம்பர் 2வது வாரத்தில் அனுப்பப்பட்டது. திடீரென அதிகாரி சமயமூர்த்தி  பணிமாறுதல் செய்யப்பட்டதை தொ டர்ந்து, நியமன ஆணை கிடைக்கப் பெற்ற 32 நபர்களையும் வழக்கில் இணைத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறி வுறுத்தியது. இதனிடையே பணபலம் படைத்த, தகுதியற்ற, அரசியல் பின்புலம் கொண்ட பலரை தகுதியானவர்களாக மாற்ற மோட்டார் வாகன வகுப்பு அதி காரிகள் தகுதிகளை சென்னை உயர்நீதி மன்ற அனுமதியுடன் மாற்றி அமைத் தது. இதனால் 226 நபர்களை தகுதி யானவர்களாக மோட்டார் வாகன துறை மாற்றியது.

இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதன் மூலம் பின்னணியில் நடைபெற்ற தில்லுமுல்லுகளை புரிந்து கொள்ள இயலும்.  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு 4 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும், இரு அரசு நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளால் தகுதி யான  இளைஞர்கள் பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர இயலாமல், இருந்த வேலைகளையும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல இயலாத நிலை உருவாகி உள்ளது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு 2018ல் வெளியிடப்பட்ட தகுதிகள் அடிப்படையில் தேர்வான வர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க ஆவன செய்திடவும், தேர்வாணையம் போன்ற முக்கிய துறைகளில், இளைஞர்களின் அரசு வேலையை எட்டாக்கனியாக்கும் வகை யில் நடக்கும் முறைகேடுகளுக்கும் உட னடியாக முற்றுப்புள்ளி வைத்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.