tamilnadu

img

செல்லும் வழியெல்லாம் உற்சாக வெள்ளம்!

வாலிபர் சங்க  மாநில தலைவரும் குமரி பிரச்சாரக் குழுவின் தலைவருமான  ரெஜிஸ் குமார் தனது அனுபவம் குறித்து கூறியதாவது: “ஏப்ரல் - 20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் கேரள மாநில செயலாளர் சுவராஜ் எங்கள் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி துவங்குவதற்கு முதல் நாள் இரவு  தோழர்கள் பல மாவட்டங்களிலிருந்து எங்கள் குழு வுக்கு வந்துசேர நள்ளிரவு 2 மணியும், அதிகாலை  3 மணியும் ஆகிவிட்டது. காலையில் 8 மணிக்கு பேரணியை துவக்க வேண்டும். எப்படி தோழர்கள் வருவார்கள் என்று நினைத்தபோது உற்சாகமாக காலை 8 மணிக்கு சைக்கிள் பேரணி துவங்கும் இடத்திற்கு தோழர்கள் அனைவரும் வந்து சேர்ந் தார்கள். பேரணி துவங்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. கன்னியாகுமரி மாவட்டம் என்பது மற்ற மாவட்டத்தை போல் சமவெளி பகுதி  இல்லை. மேடு பள்ளம் நிறைந்த பகுதி. முதல் நாள்  இரவு தோழர்கள் மிகவும் நேரம் கழித்து வந்ததால் பல தோழர்களால் சைக்கிளை இதுபோன்ற சாலைகளில் ஓட்டி வரமுடியவில்லை. பயணத்தை முடிக்கும்  இரவு 10 மணிக்கு மறுநாள் நிகழ்வுகள் மற்றும் அன்றைய நிகழ்வுகள் கூறித்து தோழர்களி டம் பேசப்படும்.    அப்போது சைக்கிள் ஓட்ட முடியாத  தோழர்கள் வேனில் ஏறி வாருங்கள் என்று கூறி னோம். ஆனால் தோழர்கள் எடுத்த உறுதிப்பாட்டில் கறாராக இருந்தார்கள்.  கன்னியாகுமரியில் எடுக்கப்படும் சைக்கிள் திருச்சியை நோக்கி தான் செல்லும் எங்களுக்கு அதில் எந்த சோர்வும் கிடையாது என்று கூறி உற்சாகமானார்கள்.

 மறுநாள் வள்ளியூரில் இருந்து கிளம்பும் போது அங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பலரும்  நின்றிருந்தனர். அவர்கள்  எங்களு டன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் எங்களுடைய சைக்கிள் பேரணி செல்லும் இடத்தில்  நின்று குடும்பத்தோடு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் எங்களுடைய பேரணியின் நோக்கத்தை பரப்பினார்கள்.  அதேபோல் பல பெண்கள் மோடியை கடுமையாக வசை பாடினார்கள். இதைவிட மிகப்  பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நாங்கள் பாஜக உறுப்பினர்கள் என்று கூறியே பலரும் எங்களுக்கு நிதி உதவியை வழங்கி உங்களுடைய கோரிக்கை வெற்றி பெறட்டும் என்று  உற்சாகப்படுத்தினார்கள்.  ஆரல்வாய்மொழியில் பைக்கில் சென்ற இருவர் எப்படி திருச்சி வரை சைக்கிளில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். எங்களுடைய நோக்கத்தை விளக்கி சொன்னதற்கு பின் எங்களை  பாராட்டி உற்சாகப்படுத்தி உங்களுடைய அமைப்பில் எப்படி சேர வேண்டும். யாரை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டார்கள். 

அதேபோல் சைக்கிள் பிரச்சாரத்தில் செல்பவர்களிடம் குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் உண்டியல் வசூல் செய்வதற்கு ஒரு குழு. நோட்டீஸ் வினியோகம் செய்வதற்கு ஒரு குழு என்று பிரிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்திற்கு  சென்றவுடன் சைக்கிள் ஓட்டிவந்த களைப்பில் ஓய்வெடுக்காமல் உடனடியாக உண்டியல் வசூல்  செய்ய சென்றுவிடுவார்கள். நோட்டிஸ் வினியோ கம் செய்யும் தோழர்களும் அவர்களுடைய பணி யினை செய்வார்கள். செல்லுமிடங்களில் மக்கள் பலரும் எங்களை உற்சாகப்படுத்தி நிதி உதவி  அளித்து வருகிறார்கள்.  திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில்  உள்ள வடவை மண்ணின் மைந்தர்கள் என்ற இளைஞர் அமைப்பினர் எங்களை உற்சாகப் படுத்தி நிதி உதவியும் குளிர்பானங்களையும் வழங்கி னார்கள்.  நாங்கள் செல்லும் மாவட்டங்களிலுள்ள திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணி வித்து உற்சாகப்படுத்துகிறார்கள். வள்ளியூரில் இருந்து வந்த ஒருவர் எங்கள் பேரணியை பார்த்து 5 கிலோ திராட்சை பழம் வாங்கி கொடுத்து பேரணியை வாழ்த்திச் சென்றார். பல இடங்களில் பார்க்கும் நபர்கள் குளிர்பானங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் பிஸ்கட் போன்றவைகளையும் வாங்கிக் கொடுத்து தற்போது எங்களுடைய வாகனங்களில் உணவுப் பொருட்கள் நிறைந்து கிடக்கின்றது.

 அந்த அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு என்பது அதிகரித்துள்ளது அதை துணிந்து கேட்கக் கூடிய அமைப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருக்கின்றது என்ற உற்சாகம் மக்கள் மத்தியில் உள்ளது. அதன் வெளிப்பாடாக பேராதரவை எங்களுக்கு தெரிவிக்கின்றனர். மதுரை புறநகர் பகுதியான டி. கல்லுப்பட்டி வந்த டைந்தபோது வெள்ளரிக்காய் விற்கும் காட்டுராணி என்கிற ஒரு அம்மா ஒரு மூடை வெள்ளரிக்காய் மற்றும் உப்பு மிளகாய்பொடி கொடுத்து எங்களை வழியனுப்பி வைத்தார்.  கன்னியாகுமரி முரசு கலைக் குழுவினர் எங்களுடைய பேரணியோடு பயணிக் கின்றார்கள். பேரணி கூட்டங்கள் நடத்தும் இடத்திற்கு  முன்னதாகச் சென்று அங்குள்ள மக்களை தங்க ளுடைய பறை இசை மூலம் ஒன்றுகூட வைக்கின்றா ர்கள். எங்கள் சைக்கிள் பேரணி அவ்விடத்திற்கு  சென்றவுடன் அவர்கள் அடுத்த இடத்திற்கு சென்று  அவர்களுடைய கலைநிகழ்ச்சியை துவங்குகிறார்கள்.

அதேபோல் விருதுநகரைச் சேர்ந்த ஐயப்பன்  என்ற ஒரு கின்னஸ் சாதனையாளர் எங்களுடைய குழுவில் வருகிறார்  இவர் ஒருமணிநேரம் தொடர்ச்சி யாக 8747 ஸ்கிப்பிங் மற்றும் ஒருமணிநேரம் தொடர்ச்சியாக 4484 ஜம்பிங் செய்தும் 1.30 மணிநேரம்,கண்களை கட்டிக்கொண்டு, சேது பந்தாசன யோகா நிலையில் சிலம்பம் சுற்றுவது என்று பல்வேறு  உலக சாதனை படைத்து நோபில் உலக சாதனை, சோலன் உலக சாதனை புத்தகம் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  அதேபோல் தமிழ்நாடு கபடி குழுவில் இருக்கும் 13 வயது சிறுவன் ஆதவன் எங்களுடைய பயணத்தில் வருகிறார்.   இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கொடு என்று ஒன்றிய - மாநில அரசுகளை கேள்வி கேட்கும் அமைப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து தோழர்களும் உற்சாகமாக சைக்கிள் பயணத்தில் எங்களோடு பயணிக்கிறார்கள். பேரணி 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர பொழுதுபோக்கு என்று மனிதகுலம் போராடி வெற்றி பெற்ற மே தின நன்னாளில் திருச்சியில் சங்கமித்து எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதுவரை எங்கள் பயணம் ஓய்வின்றிச் செல்லும் என்று கூறினார்.

- ஜெ. பொன்மாறன்