சென்னை, ஏப்.21- இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை, கன்னியா குமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பயணம் ஏப்ரல் 21 வியாழனன்று எழுச்சியுடன் தொடங்கியது. ஒன்றிய பாஜக அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகளின் விளை வாக வேலையின்மை அதிகரித்து ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் எதிர்கால கனவுகள் சிதைக்கப்பட்டுள் ளன. மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப மதம், மொழி பிரச்சனைகளை திட்டமிட்டு கிளப்பிவருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் இளைஞர் விரோத, மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப் படுத்தியும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 3 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சாரப் பயணம் துவங்கி யுள்ளது.
அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்பு களை, நிரந்தர பணியிடங்களை உரு வாக்க வேண்டும். சிறு குறு தொழில் நிறு வனங்களை பாதுகாத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4 குழுக்கள் 10 நாட்கள் சைக்கிள் பிரச்சார பயணத்தை மேற் கொள்கின்றன. இவர்கள் மே 1ஆம் தேதி திருச்சியில் சங்கமிக்கிறார்கள்.இப்பய ணங்களில் இராமநாதபுரம், தென்காசி, திருவள்ளூர், தேனி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, வேலூர் ஆகிய ஏழு மையங்களிலிருந்து புறப்படும் உப பயணக்குழுக்களும் இணைகின்றன. சென்னையில் இருந்து மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் புறப்படும் பிரச்சார பயணத்தின் தொடக்க விழா தங்கசாலை அருகே மாவட்டத் தலைவர் எஸ்.கார்த்தீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மாநிலச் செய லாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், சி.திரு வேட்டை, வடசென்னை மாவட்டச் செய லாளர் எல்.பி.சரவணத்தமிழன், பொரு ளாளர் ச.முருகேசன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மஞ்சுளா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ராய புரம் பகுதிச் செயலாளர் நீதிதேவன் வர வேற்றார். பகுதி தலைவர் அழகு பாண்டி நன்றி கூறினார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநில எல்லை அருகில் உள்ள கொல்லங் கோட்டில் இருந்து வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார் தலைமை யிலான பயணக்குழுவை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் என்.எஸ்.கண்ணன், பி.விஜயமோகனன், சிபிஎம் அடைக்காகுழி வட்டாரக்குழு செயலா ளர் ற்றி.டி.ரெஜி, கொல்லங்கோடு வட்டா ரக்குழு செயலாளர் அஜித் குமார், மாதர் சங்க மாவட்ட தலவைர் மேரி ஸ்டெல்லா பாய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொல்லங்கோடு கண்ணநாகத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த பய ணக்குழுவில் என்.ரெஜீஸ் குமாருடன் மாநில நிர்வாகிகள் பி.கோபிநாத், செல்வராஜ், விருதுநகர் மாவட்ட செய லாளர் பாரத், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வி.ரெதீஸ், செயலாளர் எட்வின் பிரைட் மற்றும் பல்வேறு மாவட் டங்களின் பிரதிநிதிகள் உள்ளனர். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் சாமியார்மடத்திலும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் பார்வதி புரத்திலும் சைக்கிள் பயணக்குழு வினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நித்திரவிளை, காப்புக்காடு, வெட்டு வெந்தி, தக்கலை, வில்லுக்குறி, ஆரல்வாய்மொழி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஏராளமான நோட்டு மாலை கள் அணிவிக்கப்பட்டன. வரவேற்புக்கு நன்றி தெரிவித்து மாநில நிர்வாகிகள் பேசினர். முன்னதாக குமரி மாவட்ட பயணத்தின் துவக்க பொதுக்கூட்டம் ஏப்ரல் 20 புதனன்று கண்ணநாகம் சந்திப்பில் மாவட்ட தலைவர் வி.ரெதீஸ் தலைமையில் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் கேரள மாநில முன்னாள் செயலாளர் எம்.ஸ்வராஜ், தமிழ்நாடு மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகை மாலி தொடங்கிவைத்தார். இலாஸ்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணி வித்து துவங்கிய பயணக்குழுவிற்கு வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலை மை தாங்கினார். மாநில துணைத்தலை வர் கே.பி.ஜோதிபாசு, மாநில செயற் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், புதுச்சேரி பிரதேச தலைவர் பாஸ்கர், செயலாளர் ஆனந்த்,மாநிலக்குழு உறுப்பினர் லீலாவதி, நிர்வாகிகள் சஞ்சய் சேகரன்,ரஞ்சித்குமார், ராஜ்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாலிபர் கள் பிரச்சாரா பயணத்தில் பங்கேற்றுள் ளனர். இதைத்தொடர்ந்து குழு புதுச்சேரி முத்தியாள்பேட்டை நகரம், முருங்கப்பாக்கம், கரிகலாம்பாக்கம், பாகூர் ஆகிய பகுதிகளில் சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது. முன்னதாக புதுவை அதிர்வு தப்பாட்டம் கலை குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. வழி நெடுகிலும் சிஐடியு சார்பில் சைக்கிள் பிரச்சார பயணக்குழு வினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை
கோவையிலிருந்து வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ் தலைமையிலான பயணக்குழுவினர் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சைக்கிள் பயணத்தை துவக்கினர். வாலிபர் சங்கத்தின் கேரள மாநில துணைச்செயலாளர் ஜெய்க். சி.தாமஸ் துவக்கி வைத்து உரையாற்றி னார். முன்னதாக காந்திபுரத்தில் நடை பெற்ற சைக்கிள் பிரச்சார பயண துவக்க விழா கூட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ் தலைமை தாங்கினார். பிரச்சார பயணத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே. சிவஞானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலா ளர் வி.ஆர்.பழனிச்சாமி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இனை செய லாளர் வி.சுரேஷ், மாதர் சங்கத்தின் கிழக்கு நகர தலைவர் வனஜா மற்றும் வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார், மாநிலக் குழு உறுப்பினர் பாரதி ஆகியோர் பங் கேற்றனர்.